அரச நியமனம் வழங்க கோரி மாம்பழ வியாபாரத்தில் ஈடுபட பட்டதாரி!

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று(26) தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .

மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தில் குதித்தார்.

கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி தெரிவிக்கையில், அரச துறையில் தனக்கு நியமனத்தை வழங்குமாறும், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.