வலகப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகாமையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி பெண், தொடருந்து பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் தொடருந்து மோதி மரணமடைந்துள்ளார்.
சிலாபம் – கொழும்பு வீதியாகச் சென்ற ‘மந்தஹாமி‘ தொடருந்து மோதியே இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.