தென்மேற்கு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரின் மையத்தில் ஒரு கார் கூட்டத்திற்குள் மோதியதில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ஒரு துயரமான போக்குவரத்து விபத்து என்று போலீசார் தெரிவித்தனர். விபத்தினை அடுத்து காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
அதோடு இந்த விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ஸ்டுட்கார்ட் பொலிசார் தெரிவித்தனர்