தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த எதிர்மறையான விமர்சனங்களால் கூட வசூலை யாராலும் அணைப்போட்டு தடுக்கவில்லை
ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், OTT உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா – வெங்கி அட்லூரி இணையும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 85 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். இது மிகப்பெரிய தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.