யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தந்தை செல்வாவின் நினைவு தினம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் (Samuel James Velupillai Chelvanayagam) 48 வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

இதற்கமைய தந்தை செல்வாவின் 48 வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் (26.04.2025) காலை யாழ். (Jaffna) தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றது.

தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.