நல்ல கணவன் அமைய சொல்ல வேண்டிய மந்திரம்

மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காத கணவர். கணவரிடம் எதையுமே எதிர்பார்க்காத மனைவி, நண்பர்கள் போல நல்ல பிள்ளைகள். இவைகள் எல்லாம் ஒருவருக்கு அமைந்து விட்டால் போதும். அந்த வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். இது எல்லாம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைத்து விடாது.

எல்லா வீட்டிலும் ஒரு பிரச்சனை இருக்கும். கணவனிடமோ மனைவியிடமோ ஒரு குறை இருக்கும் என்று சொல்லலாம். ஆனால் இறைவன் நினைத்தால், அந்த தாய் அம்பாள் நினைத்தால் நிச்சயமாக ஒரு குடும்பத்திற்கு முழு சந்தோஷத்தை கொடுக்க முடியும். நீங்கள் திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால், நல்ல கணவன் அமைய வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்களுக்கு திருமணம் நடந்து விட்டது.

ஆனால் நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் உங்கள் கணவரிடம் இல்லை. எதையும் எதிர்பார்க்காத மனைவிதான் நல்ல மனைவி அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் கணவருக்கு தீய பழக்கம் இருக்கிறது. மனைவியின் மீது அன்பு செலுத்தாத கணவர். அனாவசியமாக மனைவியை சந்தேகம் கொள்ளும் கணவர், இப்படி எல்லாம் இருந்தால் ஒரு பெண்ணினுடைய வாழ்க்கை கொஞ்சம் நரகமாக தான் இருக்கும். அந்த நரகத்திலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும் உங்களுடைய கணவரிடமும் கொஞ்சம் நடவடிக்கைகள் நல்லபடியாக மாற வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.

தாய் பத்மாவதி தாயாரை எந்தப் பெண் மனதார மனமுருகி உண்மையான பக்தியோடு வழிபாடு செய்கின்றாரோ அவளுக்கு நல்ல இல்லற வாழ்க்கை அமையும். நீங்கள் பெண்களாக இருந்து உங்களுடைய மனதில், யாரேனும் ஆண்மகனை கைப்பிடிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், அந்த ஆண்மகனை கைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அதாவது காதல் கை கூடவும் இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நிச்சயம் உங்களுக்கான நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நோட்டு புத்தகம் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த புத்தகத்தில் “ஓம் பத்மாவதி தாயாரே துணை” அப்படி என்று எழுத வேண்டும். உங்களுடைய வாழ்க்கைக்கு அந்த பத்மாவதி தாயார் துணையாக நிற்பார்கள். எத்தனை முறை எழுத வேண்டும். ஒரு நாளைக்கு 108 முறை எழுதுங்கள், அல்லது ஒரு நாளைக்கு ஒரு பேப்பர் முழுவதும் எழுதுங்கள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஒரு நாளைக்கு ஒருமுறை அந்த நோட்டுப் புத்தகத்தில் பத்மாவதி தாயாருது பெயரை எழுதி, பத்மாவதி தாயாரை வேண்டிக் கொண்டாலே போதும் உங்களுடைய இல்லற வாழ்க்கை இனிக்கும். பத்மாவதி தாயார் பெண் தெய்வம் என்பதால், இந்த பரிகாரம் குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக கொடுக்கப்பட்டுள்ள பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.