குருணாகல், கிரிபாவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபாவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.