முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தை கடத்திச் சென்ற இளைஞன் ஒருவன் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
பியகம, பண்டாரவத்த சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதலங்கல பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 101 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.