பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தொடர்ந்தும் ஆபத்தான நிலையிலேயே உள்ளார் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.
குருதிபரிசோதனைகளின் போது அவரது சிறுநீரகம் செயல் இழந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்தென்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஒருவார காலத்திற்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாப்பரசர் மேலும்சுவாசபாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என்பதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிவித்துள்ள வத்திக்கான், ஆரம்பகட்ட குருதி பரிசோதனைகளில் சிறுநீரக செயல்இழப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டன எனினும் தற்போது அது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.