ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த ‘அமரன்’ படம் 300 கோடிக்கு மேல் வசூலித்ததால் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்களின் பட்ஜெட் அதிகரித்து இருப்பதோடு, அவரை வைத்து முன்னணி நிறுவனங்களும் படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் அடுத்து விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள அர்ச்சனா கல்பாத்தி, இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டிராகன்’ என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.