கனடாவில் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய நபருக்கு பொலிசார் வலை வலை வீச்சு !

கனடாவில் வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்காப்ரோ குதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பின்ச் மற்றும் வார்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.