கோவிட் தொற்று குறித்து அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

கோவிட்(covid) தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை என அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த தொற்றானது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக கூற முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ அறிக்கைக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு உருவெடுத்த கோவிட் தொற்றானது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.