கடுகதி ரயில் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் புலதுசி கடுகதி ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு, திராய்மடுவ பிரதேசத்தை அண்மித்தபோது இளைஞர் மீது மோதியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.