திருமணமாகி ஒரு வருடத்தில் கணவனை பிரிந்த பிரியங்கா நல்காரி

சன் டிவியின் ரோஜா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. அந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆனது என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அந்த தொடருக்கு பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் அவர் நடித்தார். அந்த நேரத்தில் தான் அவர் காதலித்து வந்த ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் யாரும் இல்லாமல் மலேசியாவில் ரகசியமாக அந்த திருமணம் நடந்தது.

அதன் பிறகு சீதா ராமன் சீரியலில் இருந்து பிரியங்கா வெளியேறினார். அடிக்கடி மலேசியா சென்று வர முடியாததால் இந்த முடிவு என சொல்லப்பட்டது. அதற்கு பிறகு தற்போது ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் பிரியங்கா நல்காரி நளதமயந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

கணவரை பிரிந்துவிட்டாரா?
பிரியங்கா நல்காரி தற்போது இன்ஸ்டாபக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் ஸ்டில்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார். மேலும் நீங்க சிங்கிளா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ஆமாம் என இன்ஸ்டாவில் பதில் அளித்திருக்கிறார் அவர்.

அதனால் ஒரே வருடத்தில் கணவரை அவர் பிரிந்துவிட்டாரா என தகவல் பரவி வருகிறது. இந்த பிரிவுக்கு என்ன காரணம் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.