கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பில் சில பகுதிகளில் நாளைய தினம் (10 சனிக்கிழமை) 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இத்தகவலை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11,12, 13, 14, மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த நீர்வெட்டு நாளை மாலை 5 மணி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.