கண்டதை எல்லாம் வைரலாக்கிறத விட்டுட்டு இத வைரலாக்குங்க

நடிகை ரச்சிதா
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடம் பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை ரச்சிதா.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் பக்கம் வந்த இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

அதேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இதற்கு இடையில் ரச்சிதா-தினேஷ் விவாகரத்து பிரச்சனையும் ஒருபக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகையின் பதிவு
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

கையில் துப்பாக்கியுடன், காவல்துறை கெட்டப்பில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரச்சிதா அறிவித்துள்ளார்.

அதோடு கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.