வெளிநாடொன்றில் 36 குழந்தைகள் பரிதாப மரணம்!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் திகதி வரை பாடசாலைகளின் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமல், காய்ச்சல் அல்லது தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.