எதிர்நீச்சல் சீரியலில் இனி இந்த கதாபாத்திரம் இல்லையா?

எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்கத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என வாக்கப்பட்டு சென்று ஆதி குணசேகரன் வீட்டில் ஆணாதிக்கம் கொண்ட குடும்பத்தில் இவர்கள் படும் கஷ்டங்களை காட்டி வருகிறது தொடர்.

பெண் அடிமை, ஆணாதிக்கத்தை தாண்டி இவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதை தொடரில் வருங்காலத்தில் காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரம்
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்த இறப்பிற்கு பிறகு அவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற பெரிய கேள்வி அதிகம் இருந்து வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அண்மையில் ஆதி குணசேகரனாக, வேல ராமமூர்த்தி சில எபிசோட் வந்தார்.

ஆனால் வந்த உடனே அவர் ஜெயிலுக்கு செல்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதி குணசேகரன் தான் முக்கிய கதாபாத்திரம், அதனை அடிக்கடி காணாமல் போக வைக்கிறார்கள். அவர் இல்லாமல் கதையை விறுவிறுப்பாக செல்ல வைக்க சீரியல் குழு முடிவு எடுத்துவிட்டார்களா என நிறைய கேள்விகள் எழும்புகிறது.

மாரிமுத்துவிற்கு பதில் வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடனே அவர் ஒரு பேட்டியில், எனக்கு நிறைய படங்கள் லிஸ்டில் உள்ளது, எனவே சீரியலில் நடிக்க என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என கூறியிருந்தார்.

இதனால் சில காட்சிகள் அவரை நடிக்க வைத்துவிட்டு அவர் இல்லாமல் சீரியல் எபிசோடுகளை ஓட்டுவார்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.