பாடசாலை கட்டிடத்தில் இருந்து தவறி வீழ்ந்த மாணவி!

கண்டியில் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (9) பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டிடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சிகிற்சையில் உள்ள மாணவி ஒரு மாணவர் தலைவர் எனவும், கட்டுகஸ்தோட்டை – களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.