மறைமுகமாக விஜய் டீவியை தாக்கி பேசிய பாக்கியலட்சுமி கோபி

கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சதீஷ் தற்போது தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறார்.

அவர் வெளியே போனது ஏன்?, விஜய் டிவி உடன் என்ன பிரச்சனை என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது விழாவில் அவர் கலந்துகொள்ளாததால் அவருக்கும் டிவி சேனலுக்கும் எதோ பிரச்சனை என கூறப்பட்டு வருகிறது.

வீடியோ
இந்நிலையில் ‘எதிர்பார்த்தது தப்பு தான்’ என குறிப்பிட்டு ஒரு வீடியோவில் அதிருப்தி உடன் பேசி இருக்கிறார்.

“வாழ்க்கையில் எதிர்பார்புகள் வந்தால் ரொம்ப கஷ்டம். பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் தான் முடியும். நேற்றுவரை நான் பெரிய மேதாவி, புத்திசாலி, உலகத்தையே மாற்றலாம் என நினைத்தேன்.”

“ஆனால் நான் ஒரு முட்டாள். அதை நான் தெரிந்துகொண்டேன். நான் என்னையே மாற்றிக்கொண்டேன், இந்த உலகத்தை எல்லாம் மாற்ற முடியாது. என்னை மட்டும் தான் என்னால் மாற்றிக்கொள்ள முடியும்” என நடிகர் சதீஷ் கூறி இருக்கிறார்.