இரண்டாக உடையும் பாண்டியன் ஸ்ரோர் குடும்பம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்
ஒன்றாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்துவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் மொய் எழுதுவதில் வந்த குழப்பத்தால் பெரிய சண்டை வெடித்து ஜீவா தான் இனி மாமனார் வீட்டில் தான் இருப்பேன் என கூறிவிட்டார்.

மொய் எழுதும்போது கண்ணன் செய்த தவறால் தான் இத்தனை பிரச்னையும் என அவனை மூர்த்தி திட்ட ஐஸ்வர்யா சண்டைக்கு வருகிறார்.

அடுத்த வார ப்ரோமோ
தற்போது அடுத்த வார எபிசோடுகளுக்கான ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. எல்லோரும் கண்ணன் செய்த தவறை சுட்டிக்காட்டும் நிலையில், ஐஸ்வர்யா தன்னால் இங்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருக்க முடியாது என கூறிவிடுகிறார்.

அப்படி யாரும் கஷ்டப்பட்டு இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என மூர்த்தி சொன்னதால் ஐஸ்வர்யா மேலும் கோபமாகி பையை தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்போது அவரை கண்ணன் தடுக்க, ‘உனக்கு நான் வேண்டுமா, இல்லை இந்த குடும்பம் வேண்டுமா?’ என ஐஸ்வர்யா கேட்கிறார்.

கண்ணனை என்ன முடிவு எடுக்க போகிறார் என அடுத்தடுத்த எபிசோடுகள் வந்தால் தான் தெரியவரும்.