பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிடுள்ள அறிவிப்பு!

நாளைய தினம் (23-03-2023) இரண்டாம் கட்ட பாடசாலை சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் விடுமுறைக்கு முன்னர் 4.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிக்கு மாணவர்களுக்கு சீருடைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதேவேளை, முதல் கட்டத்தில் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சீருடைகள் 70 வீதமான மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

மேலும், பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.