கனடாவில் இருந்து இலங்கை வந்த சகோதர்களுக்கு நேர்ந்த சோகம்

கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 15ம் திகதி அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் சகோதர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் கனடாவில் இருந்து தாயகத்திற்கு சென்றவர்கள் என கூறப்படுகின்றது.

இந்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

கொழும்பு – பம்பலப்பிட்டியில் உள்ள சகோதரி சுகவீனமடைந்த நிலையில், அவரை பார்வையிடுவதற்காக கடந்த 14ம் திகதி மாலை திருக்கோவிலில் இருந்து அவர்களுடைய காரில் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளனர்.

இதன்போது கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இரு சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உயிரிழந்த இன்னொருவொருவரின் மகன் ஆகியோர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக தாயகம் சென்ற சகோதரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.