மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம். கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே. செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
மொழிப்போர் வீரர்களை
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம்கண்ணகி
மதுரையில் இட்ட
நெருப்புக்குப் பிறகு
தமிழ்நாட்டைச் சுட்டது
தமிழுக்காக
எங்கள் மறவர்கள்
தேகத்தில்
மூட்டிக்கொண்ட தீ தான்தேகங்கள்
அணைந்துவிட்டன
தீ அப்படியேசெந்தீயைத் தீண்டாதே
தள்ளிநில் இந்தியே#தமிழ் | #தமிழ்நாடு— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2023