கொய்யா இலையால் தீரும் நோய்

ஆப்பிளில் உள்ள சத்துக்களை காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பொதுவாக மக்கள் குளிர் காலத்தில் அதிகளவு கொய்யா பழம் சாப்பிடுவார்கள்.

ஆனால் இந்த சுவையான பழம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவும் என்று கூறப்படுகிறது

சர்க்கரையின் அளவு
கணையம் உடலில் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதைக் குறைக்கும் போது அல்லது நிறுத்தினால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இதன் காரணமாக அடிக்கடி தாகம், காயங்கள் தாமதமாக குணமடைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வை குறைதல் போன்ற பிரச்சனை தொடங்குகிறது

சர்க்கரை நோயை ஒழிக்க இதுவரை பயனுள்ள சிகிச்சை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதை கட்டுக்குள் வைத்திருக்க சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் கொய்யா இலை.

இலையின் மருத்துவ குணங்கள்

இதன் பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கொய்யா இலையில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இவை இதய திசுக்கள் ஃப்ரீ ராடிக்கல் பாதிப்பு காரணமாக சிதைவுறுவதைத் தடுக்கின்றன.

அதேபோல் தொடர்ந்து கொய்யா இலை நீரை அருந்தி வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவு குறைந்து, நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கிறது.

கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கொய்யா இலைகள் (நீரிழிவுக்கான கொய்யா இலைகள்) மிகப்பெரிய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இதன் இலைகளின் சாற்றில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன

கொய்யா இலைகளை கஷாயம் செய்து குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

கொய்யா இலைகள் (நீரிழிவுக்கான கொய்யா இலைகள்) மிகப்பெரிய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவும் இதன் இலைகளின் சாற்றில் ஹைப்பர் கிளைசெமிக் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன