தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகள்!

தனது தாய்க்கு நல்ல வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்த பெண் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாயாருக்கு திருமணம்
மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மௌசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் பகிரப்பட்ட கதையில் ரியா மற்றும் அவரது தாயார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்தது தொடர்பில் அவர் தெரிவித்தாவது, “என் அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தோம், நான் அங்கு தான் வளர்ந்தேன். எனக்கு 2 வயது இருக்கும் போது அம்மாவுக்கு 25 வயது.

எனது தாயாரை எல்லோரும் ‘நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று சொல்வார்கள். ஆனால் எனது தாயார் மறுத்து விட்டார். நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு அன்பு கிடைக்கும் ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார் என்று கூறுவார்”

தற்போது அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன், நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள், அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.