மீண்டும் சினிமாவிற்கு வரும் விஜயகாந்த் மகன்

விஜயகாந்த் மகன்
தமிழ் சினிமாவில் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் விஜயகாந்த். இவருக்கு இரு மகன்கள் என்பதை நாம் அறிவோம்.

இதில் சண்முக பாண்டியன் தனது தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார். இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதன்பின் படங்களில் நடிக்காமல் இருந்த சண்முக பாண்டியன், தற்போது மீண்டும் வெப் சீரிஸ் மூலம் நடிக்க வந்துள்ளார்.

மீண்டும் நடிக்க வருகிறார்
வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவல் தற்போது வெப் சீரிஸாக உருவாகிறது. நடிகரும், இயக்குனருமான சசி குமார் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் மீண்டும் நடிக்க வருகிறார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.