திருமணமாகி பதினைந்து வருடங்களுக்கு பிறகு தந்தையான நரேன்

நரேன்
நடிகர் நரேன் அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் தான் படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அவர் கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து இருந்தது அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்து லோகேஷ் படங்களிலும் அவர் இருப்பார் என்றும் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.

இரண்டாம் குழந்தை
நடிகர் நரேனின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் குழந்தை அவர்களுக்கு பிறந்திருக்கிறது. ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Narain Ram (@narainraam)