இலங்கை மின்சார சபைக்கு ஏற்ப்பட்டுள்ள பாரிய நஷ்டம்

இலங்கையின் மின்சார சபை கடந்த மூன்று மாதங்களில் 4,431 கோடி ரூபா நட்டத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாத்திலேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதேவேளை இலங்கை மின்சார சபை கடந்த ஒகஸ்ட் மாதம் மின்சார கட்டணத்தை 75 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.