மது போதையில் உப பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர்

கலவானை பிரதேசத்தில் மது அருந்திக்கொண்டிருந்த நபரை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த பொலிஸாரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம்
அத்தோடு அந் நபர் மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாலேயே உப பொலிஸார் அவரை கைது செய்ய சென்றதாக கூறப்படுகின்றது.

அதனை தொடர்ந்து காயமடைந்தவர் கலவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.