லாப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடு

அதாவது லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்கள் சிலரால் சட்டவிரோதமாக சேகரிக்கப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோக முகவர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நிறுவனத்தின் அனுமதி அல்லது முறையான அங்கீகாரம் இல்லாமல் சிலிண்டரின் தன்மையை வேறு தரப்பினருக்கு மாற்றவோ, விற்கவோ அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை

இது தொடர்பில் அந்த நிறுவனம் குறிப்பிடுகையில்,எமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோருக்கு நியாயமான வகையில் சென்றடைய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொண்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.