இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு இடையிலான திருமணங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு இடையிலான திருமணங்களை பதிவு செய்வது தொடர்பில் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்புரையை பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்கு விடுத்துள்ளார்.

திருமணங்களை பதிவு செய்வதில் சிரமம்
குறித்த சுற்றறிக்கையின் காரணமாக திருமணங்களை பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.