பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அசிம் பின்புலம் என்ன?

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி வீடே களேபரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பல பரபரப்புகளுக்கும், சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுபவர் அசிம், கோபமாக கத்துகிறார், சண்டையிடுகிறார், சக மனிதர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் விமர்சனங்களும் எழாமல் இல்லை.

இதில் யார் இந்த அசிம்? சினிமா துறைக்குள் வந்தது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த அசிம்?
அசிம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், 2008ம் ஆண்டு பிரபல சேனலில் VJவாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார்.

தன்னுடைய பேச்சுதிறமையால் ரசிகர்களை ஈர்த்துக் கொண்ட அசிம், தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் சீரியலில் என்ட்ரி ஆனார்.

அடுத்ததாக பிரியமானவள் சீரியலில் பிரபாவாக அசத்திக் கொண்டிருந்தார், கடைசி பையனாக துருதுருவென இவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.

இதனையடுத்து தெய்வம் தந்த வீடு, பகல்நிலவு தொடரில் நடித்தார், இந்த சீரியலில் நடிக்கும் போது அந்த தொடரில் நடித்த நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

அப்போதே, நான் யார் என்பது எனது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் தெரியுமா, கிசுகிசுக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அதிரடியாக விளக்கம் அளித்தார்.

பிக்பாஸில் என்ட்ரி
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்வதற்காக சேனல் தரப்பில் பேசப்பட்டு, குவாரன்டைனில் இருந்தார் அசிம்.

ஆனால் இடையில் அசிமின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என முடிவெடுத்து விலகினார்.

இதனையடுத்து பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக களமிறங்கினார், இவரது என்ட்ரிக்கு பின் டிஆர்பி அதிகரிக்க கதைக்களமும் சுவாரசியமாக சென்றது.

அந்த சீரியலும் முடிந்துவிட, பிக்பாஸ் 6வது சீசனுக்காக காத்திருந்து பல வாய்ப்புகளை நழுவவிட்டாராம் அசிம்.

மகன் தான் எல்லாமே
அசிமிற்கு சோயா என்பவருடன் திருமணம் முடிந்து ரயான் என்ற மகனும் இருக்கிறான், சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டனர், நீதிமன்ற உத்தரவுப்படி இருவாரங்களுக்கு ஒருமுறை மகனை சந்தித்து வருகிறார் அசிம்.

ரயான் தான் தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும், அவன் இல்லாத வாழ்வை நினைத்துக்கூட பார்க்கமுடியாது எனவும் பல பேட்டிகளில் உருக்கமாக பேசியிருக்கிறார் அசிம்.