உணவு உட்கொண்ட பின்னர் எலுமிச்சை யூஸ் குடிக்கலாமா?

எலுமிச்சை ஜூஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது குடிப்பதற்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட.

மறுபுறம், பெரும்பாலான மக்கள் காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ் குடித்து வருகின்றனர்.

நன்மைகள்

ஆனால் உணவு உண்ட பின் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

உணவு உண்ட பின் வெந்நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் அது செரிமானத்திற்கு உதவுகிறது. அத்தோடு அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் இது தடுக்கிறது. எனவே, உணவு உண்ட பிறகு எலுமிச்சை நீரை உட்கொள்ளலாம்.

சுடு நீர் மற்றும் எலுமிச்சை நீர் கலவையானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் சி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது, இது சளி, காய்ச்சலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

லெமனேட் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் துகள்களை வெளியேற்ற உதவுகிறது. அதனால்தான் தினமும் சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

வழக்கமான உணவுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதுடன், இரத்த அழுத்தமும் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, தினமும் உணவு உட்கொண்ட பிறகு எலுமிச்சை சாறு குடித்து வந்தால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வராது.