சஜித் தரப்பினரை மீண்டும் கட்சிக்கு அழைக்கும் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்

சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியில் இருந்து வெளியேறியோர் மீண்டும் தாய்வீடு திரும்பலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை என ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விரும்பியோர் வரலாம்

மேலும் தெரிவிக்கையில்,“எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. பிரிந்து சென்றவர்கள் யாராக இருந்தாலும் தாய்க் கட்சியுடன் இணைந்து கொள்வதில் தடையே இல்லை.

ஆனால், நாங்கள் எந்த கட்சியில் இருந்தும் உறுப்பினர்களை கவர்ந்து இழுக்க மாட்டோம். விரும்பியோர் வரலாம் என்பதே எமது கொள்கை” என கூறியுள்ளார்.