நடிகர் பிரசாந்த் மீது புகார் அளித்த இலங்கையை சேர்ந்த சுவிஸ் வாழ் பெண்!

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் பிரசாந்த் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளதாக வாய்மொழி புகார் ஒன்றை சென்னை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

இதனிடையே பிரஷாந்த் தரப்பில் இருந்து பொய் புகார் அளித்திருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது புகார் கொடுத்துள்ளார்கள். மேலும், இந்த இரு தரப்பு புகார் மனு மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.