கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் மருந்துகளிற்கு தட்டுப்பாடு!

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 40 வகையான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை காரணமாக வெளிநாட்டு தூதுவர்களிடமிருந்து மருந்து வகைககளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கையிருப்பிலுள்ள மருந்துகளைக் கொண்டு வைத்தியசாலை நடவடிக்கைகளை முடிந்தளவு முகாமைத்துவம் செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த பல நாட்களாகவே அதிகளவான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்க‍ளையும் வெளிநாட்டு தூதுவர்களின் உதவியினால் பெறப்பட்டிருந்ததாகவும், தொடர்ந்தும் அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.