இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு தினமாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு. பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக் கரைகள், ஏரி, குளங்களில் அனைவரும் ஒன்று கூடி நீர் தேவதையை பிரார்த்தித்துக் கொண்டு ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு பூஜை செய்வார்கள்.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை பூஜை செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவதே சிறந்தது.

மதுராந்தகம் கோதண்டராமருக்கு நாளை சிறப்பு திருமஞ்சனம் ஆடிப்பெருக்கு. சகல நதி தீரங்களிலும் ஆடிபதினெட்டு விழா, சஷ்டிவிரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் தீர்த்த வாரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருவாடானை சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் திருக்கல்யாணம் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு, ஆடி-18 (புதன்கிழமை) பிறை : வளர்பிறை சஷ்டி பின்னிரவு 2.46 வரை பிறகு சப்தமி நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.38 வரை பிறகு சித்திரை. யோகம் : மரண/சித்தயோகம் ராகுகாலம் : நண்பகல் 12-1.30 மணி. எமகண்டம் : காலை 7.30 – 9 மணி சூலம் : வடக்கு நல்ல நேரம் : காலை 6 -7 மணி. மாலை 4-5 மணி.

இன்றைய ராசிபலன் மேஷம் – கண்டிப்பு ரிஷபம் – அமைதி மிதுனம் – பிரீதி கடகம் – களிப்பு சிம்மம் – பயணம் கன்னி – உற்சாகம் துலாம் – உழைப்பு விருச்சிகம் – நேர்மை தனுசு – கட்டுப்பாடு மகரம் – விவேகம் கும்பம் – நன்மை மீனம் – உதவி