முன்னாள் கணவரின் வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கிய சமந்தா

பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். சமந்தா – நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு அவர்களின் வீடு விற்கப்பட்டது. இதையடுத்து நடிகை சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அந்த வீட்டில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.