சம்பா ரவை வெண் பொங்கல் செய்முறை

தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை ரவை – 1 கப்

பாசி பருப்பு – அரை கப்

உப்பு – சுவைக்கு

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

தண்ணீர் – 3 கப்

எண்ணெய் – 4 டீஸ்பூன்

தாளிக்க : எண்ணெய் – 2 டீஸ்பூன்

நெய் – 3 டீஸ்பூன்

மிளகு – 1 டீஸ்பூன்

ப.மிளகாய் – 3

சீரகம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

இஞ்சி – 1 துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

முந்திரி – 6

செய்முறை :

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும். அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.

பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள். விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள். தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள். அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.