லண்டனின் கடும் வெயிலால் பற்றி எரிந்த தண்டவாளம்

லண்டனில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிகிறது.

லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் உஷ்ணத்தால் தானாக தீப் பற்றி எரியும் புகைப்படங்களை தென்கிழக்கு ரயில்வே நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கொளுத்தும் வெயிலின் உஷ்ணம் தாங்காமல் நீச்சல் குளங்கள், கடற்கரை, தண்ணீர் பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.