இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை – காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆறு இந்திய கடற்தொழிலாளர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்படையினரின் விசேட ரோந்து நடவடிக்கையிக்ன்போது குறித்த கடற்தொழிலாளர்கள் அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் முன்னெடுப்பு

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்கள் பயணித்த இழுவைப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.