இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்தின் புதிய கேப்டன் பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது. இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக பட்லர் தலைமையில் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்தது இங்கிலாந்து அணி. எச்சரிக்கை விடுத்தது போல டெஸ்ட் போட்டியை வென்றது.

நாளை டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய டி20 அணிக்கு பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி ரோகித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்தின் கோட்டையை தகர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.