மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான தகவல்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேசமயம் 30 முதல் 60 அலகுகளுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் கட்டணத்தை பெருமளவில் அதிகரிக்காமல், அதற்காக அரசாங்கத்திடம் நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏனைய வாடிக்கையாளர்களிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.