பாடசாலை நாட்களை குறைக்க தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக பாடசாலை நாட்களை குறைக்க கல்வி அதிகாரிகள் தீர்மானத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று (10) கல்வி அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் பாடசாலை நாட்களை மட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து வசதி இன்மை பாடசாலை பிள்ளைகள் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்திதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.