நள்ளிரவில் மர்மான முறையில் இறந்துகிடந்த இளம் நடிகை

மலையாள மாடல் நடிகை ஒருவர் மர்மான முறையில் இறந்து சம்பவம் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில், விளம்பர மாடல் நடிகையான ஷஹானா(20) இவர் கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில், தூக்கில் தொங்கியப்படி இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், ஷஹானாவிற்கு 1 வருடத்திற்கு முன் தான் சஜாத் என்பவருடன் திருமணம் ஆகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, கணவர் மீது உரிய விசாரணையை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், கேரள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.