திருமண தடை போக்கும் வேடசந்தூர் நாகம்மன்

வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது அழகிய நாகம்மன் கோவில். இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் அன்னை நாகம்மன். இதனால் தினமும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

வேடசந்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர்.வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் கஷ்டங்கள் போக்கி அருள் தந்து காக்கிறாள் அன்னை நாகம்மன். இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலிக்கிறார்.

ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக அன்னை நாகம்மன் உள்ளார். கோவிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும். திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான கன்னிப்பெண்கள் இங்கு வந்து அம்மனை வணங்கி தலவிருட்சத்தில் மாங்கல்யம் கட்டி செல்கின்றனர்.

மறுவருடமே அவர்கள் திருமணமாகி கணவருடன் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். கலியுக அதிசயமாக இது நடந்து வருகிறது.

நாகம்மன் கோவிலில் நாகசதுர்த்தி அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள்.