அனுமதி இன்றி சமோசா சாப்பிடவரை அடித்து கொன்ற கடைக்காரர்

அனுமதி இன்றி சமோசா சாப்பிட்ட நபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹரி சிங் அஹிர்வார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இதனிடையில் இவரது கடைக்கு அதே பகுதியில் வசித்து வரும் விநோத் என்பர் வந்துள்ளார்.

விநோத் பயங்கரமான குடிபோதையில் இருந்துள்ள நிலையில், கடை முதலாளியான ஹரி சிங்கிடம் கேட்காமலேயே கடையில் இருந்த சமோசாவை எடுத்து சாப்பிட்ட முயன்றுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த உரிமையாளர் ஹரி, விநோத்தை கண்டித்துள்ளார். மேலும், இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அது கைகலப்பாக மாறியது.

இந்த மோதலில் விநோத்தை டீ போடும் பாத்திரம் மற்றும் பெரிய கம்பை கொண்டு உரிமையாளர் ஹரி மற்றும் அவரது மகன் சீத்தாரம் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த விநோத் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக விநோத்தின் தாயார் ரமாவதி காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.