1.52 லட்சத்தில் அறிமுகமாக இருக்கும் ஆப்பிள் ஹெட்செட்

இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.

மெய்நிகர் தொழில்நுட்பம் (Virtual Reality), மிகைப்படுத்தப்பட்ட மெய்மை (Augumented Reality) ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் ஆப்பிளின் மிக்ஸுடு ரியாலிட்டி ஹெட்செட் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில் தற்போது அறிமுகம் தேதி மாற்றப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் அளவிலான இந்த ஹெட்செட்களை ஆப்பிள் வெளியிடுவதற்கு ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சிப் ஆப்பிள் நிறுவனத்தினாலேயே தயாரிக்கப்படவுள்ளது.

இதில் 10 சென்சார்கள் இடம்பெறும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரு.1.52 லட்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹெட்செட் கடந்த 2015-ம் ஆண்டு முதலே உருவாக்கப்பட்டு வருகிறது.