பூஜை அறையில் இந்த சாமி படங்களை மட்டும் வைக்காதீர்கள்…. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு வீட்டில் பூஜை அறை என்பது முக்கியமான பகுதியாகும்.

வாஸ்துப்படி பூஜை அறையை முதலில் வைப்பது மிகவும் முக்கியம்.

இதன்படி பூஜை அறை வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டப்பட வேண்டும். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் அல்லது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் இருக்கலாம்.

அதே போல பூஜை அறையில் கடவுள் விக்ரங்களையும் சரியான முறையில் வைக்க வேண்டும். மேலும், சில சாமி படங்களை நாம் வைக்க கூடாது.

பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்க கூடாது?

  1. சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது.
  2. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது.
  3. கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவனம் கட்டிய முருக பெருமானின் படத்தை படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
  4. கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.
  5. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
  6. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்யும் மற்றும் தலைவிரிகோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
  7. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில், வைத்து பூஜை செய்யக் கூடாது.
  8. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
  9. வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
  10. தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது.